×

கரடிக்கல்லில் மே 5 ஜல்லிக்கட்டு: இன்று மாடு, நாளை வீரருக்கு பதிவு

திருமங்கலம், மே 3: திருமங்கலம் கரடிக்கல்லில் மே 5ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதையொட்டி இன்று மாடுகளுக்கும், நாளை மாடுபிடி வீரர்களுக்கும் பதிவுகள் நடைபெறவுள்ளது. திருமங்கலத்தை அடுத்துள்ள கரடிக்கல்லில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோயில் திருக்கல்யாணத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நாளை மறுநாள் 5ம் தேதி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு துவங்கி மாலை வரையில் போட்டி நடக்கும். தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒன்றான இப்போட்டியில் பங்குபெறும் காளைகளின் பதிவு இன்றும்,

நாளை மாடுபிடி வீரர்களின் பதிவும் நடைபெற உள்ளது. கடந்தாண்டை போல் ஆயிரத்திற்கு மேற்பட்ட காளைகள் பங்குபெறும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி திருமங்கலம் ரோட்டில் கரடிக்கல் அரசு பள்ளிக்கு எதிரான மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியை காண வரும் பொதுமக்களின் அமர்வதற்காக காலரி வசதி, காளைகள் வரிசையாக வாடிவாசல் நோக்கி செல்லும் பகுதி, போட்டி நடைபெறும் பகுதி உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்பாடுகளை கரடிக்கல் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

Tags : player ,
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...