மதுரை தல்லாகுளம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சித்ராலட்சுமி (71). சம்பவத்தன்று இவர் மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு கரூர் சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 2 பவுன் தங்கச்செயின், ரூ.10ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்றனர். ஊரிலிருந்து திரும்பி வந்த சித்ராலட்சுமி, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை, பணத்தை காணாததால் பதறி போனார். இதுகுறித்த புகாரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.