ஈரோடு, மே 3: தொழிலாளர் தினத்தையொட்டி ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்கமான எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பில் ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் ஆட்டோ ஸ்டாண்டில் கொடியேற்று விழா நடந்தது. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தாவூத்அலி வரவேற்றார். மாவட்ட தலைவர் அப்துல்ரகுமான் சங்க கொடியை ஏற்றி வைத்தார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஹசன்பாபு, கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் முகமதுலுக்மானுல் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணா தியேட்டர் ஆட்டோ சங்க கிளை தலைவர் சக்திவேல் இனிப்பு வழங்கினார்.