×

கரூர் தெற்கு மடவளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளை அகற்ற வேண்டும்

கரூர், மே 3: கரூர் தெற்கு மடவளாகம் பகுதி சாலையில் விழுந்து கிடக்கும் மரக்கிளையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் ஈஸ்வரன் கோயில் பகுதியில் இருந்து ஆஸ்பத்திரி சாலைக்கு செல்லும் சாலை தெற்கு மடவளாகம் பகுதி. இந்த சாலையின் வழியாக அருகில் உள்ள லாரி மேடு பகுதியில் இருந்து ஏராளமான லாரிகள் இதன் வழியாக சென்று வருகிறது.மேலும், ஈஸ்வரன் கோயில் பகுதியில் இருந்து ஜவஹர் பஜார், நகராட்சி அலுவலகம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் இரண்டு சக்கர வாகனங்களில் இதன் வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, காற்றின் காரணமாக, நாவல் மரத்தின் கிளை ஒன்று முறிந்து சாலையை மறைத்து கிடக்கிறது. இதனால், இந்த சாலையின் வழியாக செல்ல முடியாமல் அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். நகரின் மையப்பகுதி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கும் இந்த மரக்கிளையை உடனடியாக இந்த பகுதியில் இருந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : hemisphere ,Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...