×

கரூர் அரசு கல்லூரியில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சேவை மையம்

கரூர், மே 3: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி கலந்தாய்வு சேவை மையம் கரூர் அரசுகலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.மே 2ம்தேதி முதல் 31ம்தேதி வரை மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தினை இணைய வழி மூலமாக பதிவு செய்யலாம். நேற்று மாணவ மாணவியர் அரசு கல்லூரிக்கு வந்து இணையவழி மூலமாக விண்ணப்பித்தனர். கல்லூரி முதல்வர் (பொ) ரவிசந்திரன், பேராசிரியர்கள் ரவிசந்திரன், பாலுசாமி, தங்கதுரை ஆகியோர் விதிமுறைகளை மாணவ மாணவியருக்கு விளக்கி கூறினர். இணைய வழி மூலமாக விபரங்களுடன் வீட்டில் இருந்தும் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் வங்கி காசோலை நாட்டுமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பதிவு செய்ய கண்டிப்பாக சேவை மையத்திற்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


Tags : Engineering Student Admission Center ,Karur Government College ,
× RELATED கலெக்டர் துவக்கி வைப்பு கரூரில் அரசு...