×

பயணிகள் முற்றுகை போராட்டம்

சங்கராபுரம், மே 3: சங்கராபுரத்தில் இருந்து மல்லாபுரம் கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்து, நேற்றுமுன்தினம் பேருந்து நிறுத்தம் வந்தது. டிரைவர் பேருந்தை நிறுத்தி விட்டு இறங்கி சென்று விட்டார். பேருந்தில் மல்லாபுரம் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்ததால், மல்லாபுரம் மற்றும் அந்த வழித்தடத்தில் செல்லும் வழியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் பயணிகள் அந்த பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டனர். ஆனால் பேருந்து எடுக்க வேண்டிய நேரம் கடந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் டிரைவர் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், அங்குள்ள தகவல் அலுவலகத்தை முற்றுகையிட்டும், பேருந்து முன் நின்றும் கோஷமிட்டனர். இது குறித்து சங்கராபுரம் பணிமனை அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாற்று ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வந்து பேருந்தை எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை