×

‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் பிறப்பு, இறப்பு வழக்குகளை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்

மதுரை, மே 1: பிறப்பு, இறப்பு வழக்குகளை நீதிமன்றம் விசாரிக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். செயலாளர் இளங்கோ வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன விபத்துக்கள் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும். வாகன கட்டுப்பாட்டு சட்டப்படி விபத்து வழக்குகளை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். பிறப்பு, இறப்பு பதிவு வழக்குகளை விசாரிக்கின்ற அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் துணைத்தலைவர்கள் உத்தமன், ஸ்டெல்லா ராஜ்குமார், அரிச்சந்திரன், நந்தகோபாலன், துணைச் செயலாளர்கள் பூரணசந்திரன், தனலெட்சுமி, ராமசாமி, சந்திரசேகரன், செயற்குழு உறுப்பினர்கள் கலாவதி, பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் அலி சித்திக் நன்றி கூறினார்.

Tags : court ,death ,birth ,KP Vidyadharan ,Jyotitha Ratna ,
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...