×

ராஜாக்கமங்கலம் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிப்பு

ஈத்தாமொழி, மே 1 :  ராஜாக்கமங்கலத்தில் அனுமதியில்லாமல் பட்டாசு தயாரித்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
 ராஜாக்கமங்கலம்  அருகே ஆறுதெங்கன்விளை பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (39).வடக்கு  கன்னக்குறிச்சி பகுதியில் அனுமதி பெற்று பட்டாசு தயாரித்து வந்தார்.  
தற்போது தனது சகோதரன் மணிகண்டன்(36) என்பவருடன் சேர்ந்து  ஆறுதெங்கன்விளையில் உள்ள தனது வீட்டில் பட்டாசு தயாரித்து விற்பனை செய்து  வந்துள்ளார்.
 இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர்  உஷாதேவி ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து போலீஸ்  இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  சோதனை நடத்தினர். இதில் அனுமதி பெறாமல் வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்தது  கண்டுபிடிக்கப்பட்டது.
 இதையடுத்து அங்கு தயார் செய்து,  விற்பனைக்காக வைத்திருந்த 3 மூடை பட்டாசுகள், அரை கிலோ வெடிமருந்து  ஆகியவற்றை அதிரடியாக போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அனுமதி பெறாமல்  வெடிமருந்து பயன்படுத்தி பட்டாசு தயாரித்த கதிரவன், மணிகண்டன் ஆகியோரை  போலீசார் கைது
செய்தனர்.

Tags : home ,Rajagamangalam ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...