×

சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு பெண்கள் மலர்தூவி வரவேற்பு

சூலூர், மே 1: சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ெபண்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று சூலூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பீடம்பள்ளி மற்றும் கண்ணம்பாளையம், இபி காலனி, அம்பேத்கர்  நகர், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பெண்கள்  ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.
வாக்காளர்கள் மத்தியில் பொங்கலூர் பழனிசாமி  பேசுகையில், ‘‘இப்பகுதி மக்களுக்கு, அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். குறிப்பாக, விசைத்தறி தொழிலில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும். விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி  செய்யப்படும். கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்’’ என்றார்.
பிரசாரத்தில், சூலூர் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு, கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ, கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், வழக்கறிஞர் பரந்தாமன்,  எம்எல்ஏ.க்கள்,  செங்குட்டுவன், நந்தகுமார், இன்பசேகரன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் பைந்தமிழ்பாரி, முன்னாள் எம்.பி சுகவனம், ராஜேந்திரன், தளபதி முருகேசன், இருகூர் சந்திரன், எஸ்.எம்.சாமி, கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோகரன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல தலைவர் சுசி.கலையரசன், சித்தநாயக்கன்பாளையம் சீனிவாசன், குருசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Women ,Pongalur Palanisamy ,reception ,Maldives ,Sulur block ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது