×

அடிப்படை வசதி செய்து தர கோரி தொழிற்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

பந்தலூர், மே 1: நீலகிரி மாவட்ட எல்பிஎப் தொழிற்சங்க துணைப்பொதுச்செயலாளர் மாடசாமி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள  மகாவீர் பிலாண்டேசன் மற்றும் அதன் அருகில் செயல் பட்டுவரும் தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ நிறுவனங்களில் விவசாயிகள், ஏராளமான பொதுமக்களும் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த பல வருடங்களாக தார் சாலை சீரமைக்காமல் இருப்பதால் தார்சாலை முழுவதும் பழுதடைந்துள்ளது.
இதனால் அரசு பஸ் உட்பட்ட எவ்வித வாகனங்களும் இப்பகுதிக்கு சென்று வரமுடியாமல் உள்ளது. இதனால் நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : union ,facilities ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு...