×

செக்ஸ் வீடியோ எடுத்து மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபர் திருப்பூர் மாவட்டத்திலும் பெண்களிடம் கைவரிசையா?

ஈரோடு, மே 1: பெண்களை செக்ஸ் வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான ஈரோடு ரியல் எஸ்டேட் அதிபர் திருப்பூர் மாவட்டத்திலும் பெண்களிடம் லீலையில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த 21 வயது பெண், கல்லூரி படிக்கும் போது, வில்லரசம்பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் (37) என்பவருடன் நட்பு ரீதியாக பழகினார்.
அந்த பெண்ணை ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விருந்து கொடுப்பதாக கூறி ஏற்காட்டிற்கு காரில் அழைத்து சென்று செக்ஸ் படங்களை காண்பித்து, தவறாக நடந்தார். அதை ராதாகிருஷ்ணன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அந்த பெண்ணை மிரட்டி ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் உள்ள தனியார் லாட்ஜிற்கு அழைத்து சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமன்றி தனது நண்பர்களுக்கும் விருந்தாக்க முயன்றதால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஈரோடு மகளிர் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். இவர், இதேபோல் ஏராளமான பெண்களை சீரழித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
திருப்பூரில் பல பெண்களிடம் உல்லாசம்: ராதாகிருஷ்ணன் கடந்த 2006ம் ஆண்டில் இருந்து திருப்பூர் மாவட்டத்தில் பனியன் கம்பெனி நடத்தி வந்தார். அப்போது, அவரது நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் பெண்களை ஆசை வார்த்தை கூறி மயக்கி, உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அவரது நிறுவனத்தில் வேலை பார்த்த திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த பிருந்தா தேவி என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி அவரிடம் செக்ஸ் வைத்து கொண்டார். இதில் பிருந்தாதேவி கருவுற்றதால், ராதாகிருஷ்ணன் அவரது தந்தை ஆறுமுகத்திற்கு தெரியாமல், பிருந்தாதேவியின் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.  சில மாதங்களில் பனியன் தொழில் நஷ்டம் ஏற்பட்டதால், கம்பெனியை  மூடிவிட்டு, பிருந்தா தேவிக்கு தெரியாமல் ஈரோட்டிற்கு வந்து விட்டார். பின்னர், அவரது மனைவி பிருந்தா தேவி 2வயது குழந்தையுடன், ராதாகிருஷ்ணன் முகவரி தெரிந்து, வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டு அவரை மீண்டும் கரம் பிடித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் ராதாகிருஷ்ணன் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுவதால், திருப்பூர் மாவட்டத்தில் அவர் மீது இதுபோன்ற வழக்குகள் ஏதாவது பதியப்பட்டுள்ளதா? என ஈரோடு போலீசார், திருப்பூரில் விசாரணை நடத்த உள்ளனர்.
கல்லூரி மாணவி தோழிகளுக்கு தொல்லை: ராதாகிருஷ்ணன் கல்லூரி மாணவியை மிரட்டி, அவரது தோழிகளின் சிலரிடம் செல்போனில் பேசி செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால், அப்பெண்ணின் தோழிகளில் சிலர் செல்போன் எண்ணை மாற்றி விட்டு, ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட மாணவியிடம் பழகுவதை நிறுத்தி கொண்டனர்.
புகார் அளித்தால் நடவடிக்கை: இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு கல்லூரி மாணவி மட்டுமே புகார் அளித்துள்ளார். ஆனால், ராதாகிருஷ்ணனால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வந்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Real estate agent ,district ,Tirupur ,
× RELATED சொத்து பிரச்சனை!: திருப்பூர் மாவட்டம்...