×

துறையூர் அடுத்த புலிவலத்தில் மழை பொழிய வேண்டி 108 கோ பூஜை விழா

துறையூர், மே 1: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ளது புலிவலம். இங்கிருந்து செல்லும் சாலையில் ஓம் சக்தி மகாமாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பொதுமக்கள் நலன் கருதியும், மழை வேண்டியும் 108 கோ பூஜையும், சங்கு பூஜையும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஓம் சக்தி  மகா மாரியம்மனுக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் கணபதி ஹோமத்துடன் பூஜை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் மகாலட்சுமி ஹோமம், காமதேனு ஹோமம், வர்ண ஹோமம், நவகிரக ஹோமம், அஸ்தர ஹோமம் ஆகியவை நடைபெற்றது. காலை 8 மணிக்கு 108 கோ பூஜையும், தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. புலிவலம் மற்றும் துறையூரை  சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : ko pooja festival ,Thuraiyur ,
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி