×

திருச்சியில் தண்டோரா போட்டு சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, மே 1:  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று தண்டோரா போட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் திருச்சி ஜீவானந்தம், தஞ்சை சந்திரசேகரன், நாகை கணேசன், புதுக்கோட்டை கருப்பையா, திருவாரூர் மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். பணி  நீக்கத்தால் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை தனியார் பராமரிக்க வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசே ஏற்று பணிகளை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்  தண்டோரா போட்டு சங்கத்தினர் கோஷம் எழுப்பினர்.

Tags : Dandora ,Trichy ,road workers ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...