×

முசிறியிலுள்ள அம்மன் கோயில்களில் தீமிதி விழா

தா.பேட்டை, மே 1:   முசிறி பரிசல்துறை ரோட்டில் உள்ள மகா மாரியம்மன் கோயில் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே உள்ள மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி தீமிதி விழா நடைபெற்றது.  பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் தீர்த்தகுடம், பால்குடம் எடுத்தல், பூச்சொரிதல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்றன. நேற்று கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் கைகளில் தீச்சட்டி ஏந்தியும், , அலகு குத்தியும், தீமித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக காவிரி ஆற்றிலிருந்து கரகம் பாலித்து திரளான பக்தர்கள் புடைசூழ எடுத்து வரப்பட்டது. முசிறி, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். இதேபோல தாலுகா அலுவலகம் அருகே உள்ள மாரியம்மன் கோயிலிலும் தீமிதி விழா நடைபெற்றது.

Tags : festival ,Amman ,temples ,Musiri ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...