×

பிளேடால் கை நரம்பை அறுத்து போலீஸ்காரர் மனைவி தற்கொலை முயற்சி

திருச்சி, மே 1:  திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிபவர் ஜேம்ஸ் பாண்டியன்(27). இவரது மனைவி செர்லின் பிரபா(24). இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். காவலர் குடியிருப்பில் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.
 இந்நிலையில் தனிக்குடித்தனம் செல்வோம் என செர்லின் பிரபா, கணவரை வற்புறுத்தி வந்தார். இதற்கு ஜேம்ஸ் பாண்டியன் சம்மதிக்கவில்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதுபோல நேற்றுமுன்தினமும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ஜேம்ஸ்பாண்டியன் வெளியில் சென்று விட்டார்.கணவர் சென்ற சிறிது நேரத்தில் செர்லின் பிரபா, பிளேடால் கை நரம்பை அறுத்துக்கொண்டார். இதில் ரத்தம் அதிகளவில் வெளியேறியதால், மயங்கி விழுந்தார். உடனே அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,policeman ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை