×

திருக்கோவிலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

திருக்கோவிலூர், மே 1:  திருக்கோவிலூர் அருகே திருமணமான இரண்டு மாதத்தில் இளம்பென் தற்கொலை செய்தது தொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த கெங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த அருள்தாஸ் மகள் பிலோமினாள் (28). ஆசிரியை பயிற்சி முடித்துள்ளார். இவருக்கும், திருக்கோவிலூர் அடுத்த நெடுங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த இமானுவேல் மகன் ஆனந்தராஜ் (31) என்பவருக்கும் இடையே கடந்த பிப்ரவரி 17ம் தேதி திருமணம் நடந்தது. ஆனந்தராஜ் ஓட்டலில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆனந்தராஜ் குடும்பத்தினர் பிலோமினாளிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக தெரிகிறது.

இதற்கிடையே நேற்று பிலோமினாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் லூர்துமேரிக்கு ஆனந்தராஜ் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது உறவினர்களுடன் நெடுங்கப்பட்டு கிராமத்துக்கு வந்து பார்த்தபோது மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த தடயமும் இல்லை. இதையடுத்து தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக மணலூர்பேட்டை போலீசில் லூர்துமேரி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ஆனந்தராஜ், உறவினர் அலெக்ஸ் மனைவி ரேஷ்மா, மாமனார் இமானுவேல் மற்றும் அமலோற்பவம் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பிலோமினாள் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா என்று திருக்கோவிலூர் சார்
ஆட்சியர் சாரு விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை