திண்டிவனம், மே 1: திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி, தலைமை ஆசிரியர் நெடுமாறன் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது, தலைமையாசிரியர் அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மின்சாரத்திற்காக பயன்படுத்தும் யுபிஎஸ் மற்றும் பேட்டரிகள் 2 திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து தலைமையாசிரியர் நெடுமாறன் அளித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.