×

தர்மபுரி அருகே கிறிஸ்தவ ஆசிரமத்தில் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த 2 பேர் கைது

தர்மபுரி, மே 1: தர்மபுரி அருகே கிறிஸ்தவ ஆசிரமத்தின் பூட்டு உடைத்து, 6 பவுன் தங்க நகையை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தர்மபுரி சோகத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செபி(50). இவர், அங்குள்ள கிறிஸ்தவ ஆசிரமத்தில் பாதிரியாராக சேவை செய்து வருகிறார். இந்த ஆசிரமத்தில் தியான குடில் அமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை தியான குடிலை பூட்டிவிட்டு, நடை பயிற்சிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த தங்க நாணயம், செயின், மோதிரம் உள்ளிட்ட 6 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செபி, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Christian ,persons ,Dharmapuri ,
× RELATED அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம்