×

புதுக்கோட்டை அருகே வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

புதுக்கோட்டை, மே 1: புதுக்கோட்டை அருகே டீக்கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசிய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை அருகே குலையன்கரிசல் கீழத்தெருவைச் சேர்ந்தவர் வேல்பாண்டி(55). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பட்டுலிங்கம் மகன் சத்தியராஜ்(26), கார் டிரைவர். வேல்பாண்டி வீட்டில் வளர்த்து வரும் நாய், சத்தியராஜை கடிக்க துரத்தியதாம். இதுதொடர்பாக வேல்பாண்டியிடம் சத்தியராஜ் தட்டிக்கேட்டதால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஆனது.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வேல்பாண்டி வீட்டில் சத்தியராஜ், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீவைத்து வீசியதாக தெரிகிறது. இதில் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு வெடிக்காமல் தவறிவிழுந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக வேல்பாண்டி அளித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை எஸ்.ஐ. அந்தோணிராஜ், விசாரணை நடத்தி சத்தியராஜை கைது செய்தார்.




Tags : home ,Pudukottai ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...