×

முதியவர் தற்கொலை

தா.பழூர், மே 1: தா.பழூர்  அருகே உள்ள சிலால் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராசாகண்ணு (72). இவர் கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த அவரது மருமகன் அசோகன் (38) என்பவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று ராசாகண்ணு, அசோகனை மருத்துவமனைக்கு அழைத்து போகுமாறு கூறினார். அதற்கு ஆடு, மாடுகளை கட்டி விட்டு வருவதாக அசோகன் சென்றார். இந்நிலையில் கால் வலி தாங்க முடியாத ராசாகண்ணு, வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்ஐ தினேஷ்குமார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை