×

வாங்கல் எல்லைமேடு பாசன வாய்க்கால் சீரமைக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

கரூர், மே. 1: கரூர் வாங்கல் எல்லைமேடு வழியாக செல்லும் பாசன வாய்க்காலை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என  விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் இருந்து நெரூர் வரை கிராமங்களின் வழியாக பயணிக்கும் வகையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் இதன் வழியாக செல்லும் தண்ணீர், அவ்வப்போது பாசனத்துக்கும் பயன்பட்டு வந்தது. இந்நிலையில், ஆண்டுகள் பல கடந்த நிலையில், நீண்ட நெடிய இந்த பாசன வாய்க்கால் பல இடங்களில் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மேலும், இந்த வாய்க்கால் பயணிக்கும் பகுதிகளில் ஆங்காங்கே ஆக்ரமிப்புகளும் உள்ளன. இந்த வாய்க்காலை துவங்கும் பகுதியில் இருந்து முடிவடையும் பகுதி வரை சீரமைத்து, திரும்பவும் மழை நீர் மற்றும் ஆற்று நீர் சீராக செல்லும் வகையில் பணிகள் மேற்கொண்டால் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அதிகளவு பயனடைவார்கள் என கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு, இந்த பாசன வாய்க்காலை அனைத்து பகுதிகளிலும் சீரமைத்து தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...