×

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் துணை ராணுவப்படை கரூர் வருகை

அரவக்குறிச்சி, மே.1:  அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி நே துணைராணுவப்படையினர் நேற்று கரூர் வந்தனர். அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மத்தியதொழிற்பாதுகாப்பு படை 3 கம்பெனியினர் சுமார் 300 பேர் குஜராத்தில் இருந்து தனிரயிலில் புறப்பட்டு நேற்று கரூர் வந்தடைந்தனர். நேற்று அரவக்குறிச்சி  தொகுதிக்கு சென்று பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விரைவில் துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு நடை பெற உள்ளது. ஏற்கனவே அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 23இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிட தக்கது.

Tags : Aravakurichi ,arrival ,Karur ,
× RELATED கரூர் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி