×

தளவாபாளையத்தில் குடிநீர்தொட்டி பழுதால் மக்கள் அவதி

கரூர்,மே.1: கரூர் தளவாபாளையத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பல இடங்களில் சின்டெக்ஸ் தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்து போய்விட்டது. இதனால் சின்டெக்ஸ்தொட்டிகள் நீர் நிரப்பப்படாமல் கிடக்கின்றன. காட்சிப்பொருளாக சின்டெக்ஸ் தொட்டிகள் மாறிவிட்டதால் மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குடிநீர்பிரச்னைக்கு துரிதமாக தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : reservoir ,
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு