ஈரோடு, ஏப். 30: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சியின் சார்பில் நிர்வாகக்குழு கூட்டம் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் வீரா.சிதம்பரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில் அமமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வது, கட்சியின் தென் மண்டல மாநாட்டை மதுரையில் ஜூன் 13 மற்றும் 14ம் தேதிகளில் நடத்துவது, தமிழகம் முழுவதும் கட்சிக்கு பொறுப்பாளர்களை நியமனம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.