திங்கள்சந்தை,ஏப்.30: எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் வெள்ளிச்சந்தையில் அமைந்துள்ள அருணாச்சலா பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றதோடு 60 சதவீத மாணவ மாணவிகள் 400க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 65 மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில்,அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 65 மாணவ மாணவிகளில் ஒரு மாணவி 492 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் 3 மாணவிகள் 480 மதிப்பெண்களுக்கு மேலும், 19 மாணவ மாணவிகள் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 37 மாணவ மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேலும் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.வெற்றியும், சாதனையும் புரிந்த அனைத்து மாணவ மாணவிகளையும் பள்ளி தாளாளர் கிருஷ்ணசுவாமி, துணை தாளாளர் சுனி, பள்ளியின் முதல்வர் லிஜோமோள், ஆலோசகர் ஜோசப் ஜெவகர் மற்றும் ஆசிரிய ஆசிாியைகள்வாழ்த்தினர்.