×

திருவெண்ணெய்நல்லூர் அருகே தீக்குளித்த பெண் பரிதாப சாவு

திருவெண்ணெய்நல்லூர், ஏப். 30: திருவெண்ணெய்நல்லூர் அருகே வயிற்றுவலியால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.  திருவெண்ணெய்நல்லூர் அடுத்த வடமருதூர், காட்டுக்காலனியை சேர்ந்தவர் சங்கர் மகள் பிரித்தா(19). இவருக்கும் அவரின் உறவினர் காத்தான் மகன் குமரேசன் என்பவருக்கும் கடந்த 7மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவரின் வீடும் ஒரே தெருவில் அமைந்துள்ளது. இருவரின் பெற்றோரும் சென்னை பகுதியில் செங்கல் அறுக்கும் வேலை செய்து வருகின்றனர். பிரித்தாவின் கணவர் பெங்களூரில் பழகடையில் வேலை செய்து வருகிறார். பிரித்தாவுக்கு வயிற்று வலி இருந்து வந்ததால் அவரை மட்டும் வீட்டில் விட்டு அனைவரும் சென்றுவிட்டனர்.

 பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இந்நிலையில், நேற்று மாலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பிரித்தா அவரின் பாட்டி மலர் வீட்டின் மாடிக்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு கூச்சலிட்டுள்ளார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது பிரித்தா உடல் முழுவதும் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அவரின் உறவினர்கள் திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  
 அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று பிரித்தாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து பிரித்தாவின் தந்தை சங்கர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags : Thiruvannai Nallur ,
× RELATED திருவெண்ணெய்நல்லூரில் பாலம் கட்டும் பணியை எம்எல்ஏ ஆய்வு