×

தென்காசி கல்வி மாவட்டத்தில் எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

நெல்லை, ஏப்.30: பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலபட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்432 சராசாி மதிப்பெண் பெற்று தென்காசி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். மாணவி ஜினிதா 474 மதிப்பெண்கள், அபிஷேக் 473 மதிப்பெண்கள், மெபிஷா வைஸ்லின் 470 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண் பெற்று கீர்த்தனா முதலிடத்தையும், ஆங்கிலப்பாடத்தில் 96 மதிப்பெண் பெற்று வித்யா முதலிடத்தையும், கணிதப்பாடத்தில் அபிஷேக் 96 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், அறிவியல் பாடத்தில் 96 மதிப்பெண் பெற்று மெபிஷா வைஸ்லின் முதலிடத்தையும், சமூக அறிவியல் பாடத்தில் அபிஷேக் 98 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும் பிடித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 64 மாணவர்களில் 470க்கு மேல் மூன்று மாணவர்களும் 450 முதல் 470 வரை 12 மாணவர்களும், 425 முதல் 450 மதிப்பெண் வரை 20 மாணவர்களும், 400 மதிப்பெண்கள் முதல் 425 வரை 9 மாணவர்களும், 350 முதல் 400 மதிப்பெண் வரை 20 மாணவர்களும் பெற்று சராசாரியாக 500க்கு 432 மதிப்பெண் பெற்று தென்காசி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் ராஜசேகரன், முதல்வர் மகேஷ்வரி,  துணைமுதல்வர் சரளா ராமச்சந்திரன், அகாடமிக் டைரக்டர் ராஜ்குமார்,அகாடமிக் அட்வைசர் இன்பசேகரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.



Tags : SMA Metric School ,Tenkasi Education District ,
× RELATED கிரீடம், மாலையுடன் பள்ளியில் ஆய்வு...