×

குளித்தலையில் மருங்காபுரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சீரமைப்பு

குளித்தலை,ஏப்.30: மருங்காபுரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மனதட்டை காவிரி ஆற்றிலிருந்து மருங்காபுரி கூட்டு குடிநீர்திட்ட குழாய் குளித்தலை-மணப்பாறை சாலையில் உள்ள இரட்டை வாய்க்கால் வழியாக அய்யர்மலை, மணப்பாறை, புத்தாநத்தம் வழியாக மருங்காபுரி வரை செல்கிறது. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. மருங்காபுரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பல இடங்களில் பழுதாகி குழாய் உடைப்பு ஏற்படுவதும், அதனை சரி செய்வதற்குள் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த இரட்டை வாய்க்கால் வழியாக செல்லும் மருங்காபுரி கூட்டு குடிநீர்திட்ட குழாய் திடீரென வெடிப்பு ஏற்பட்டு நீர்வீழ்ச்சி போல் கீழே கொட்டி வாய்க்காலில் கலந்து செல்கிறது. தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில் தண்ணீர் வீணாகி வருகிறது.

அதனால் மருங்காபுரி கூட்டு குடிநீர்திட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில் வீணாகாமல் இருக்க நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த செய்தி கடந்த 27ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியால் வைபுதூர் இரட்டை வாய்க்கால் பாலம் வழியாக செல்லும் மருகாபுரி கூட்டு குடிநீர் குழாயில் வீணாகும் குடிநீர், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்தனர். அதனால் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : bathroom ,
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் ஸ்டேஷனில்...