×

திருச்செந்தூர் அருகே பரிதாபம் பனைமரத்தில் பைக் மோதி தொழிலாளிகள் இருவர் பலி

திருச்செந்தூர், ஏப். 30: திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் பைக்கில் மோதியதில் தொழிலாளிகள் இருவர் பரிதாபமாக இறந்தனர். நெல்லை பேட்டை, ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52) பெயிண்டர். இவரது மனைவி கோமு. தம்பதிக்கு 2 மகன்கள். இதே போல் கயத்தாறு, கோட்டைப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி மீனாட்சி (42) என்பவருக்கு பிரமு என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ஆறுமுகமும், மீனாட்சியும் பணி நிமித்தமாக நேற்று திருச்செந்தூருக்கு வந்துவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பைக்கை  ஆறுமுகம் ஓட்டிவந்தார். திருச்செந்தூர் அடுத்த ராணிமகாராஜபுரம் பாலம் அருகே  சென்றபோதுதறிகெட்டு ஓடிய பைக் சாலையோரம் இருந்த பனைமரத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் இந்த விபத்தில் மீனாட்சி படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் திருசெந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வரும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கந்தசாமிபுரம் விஏஓ பொன் இசக்கி அளித்த புகாரின்பேரில் திருச்செந்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துராமன், எஸ்ஐ கனகராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : persons ,bike races ,Tiruchendur ,Panamaram ,
× RELATED 3,288 நபர்கள் தபால் வாக்கு செலுத்தினர்