×

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால், ஏப்.30: காரைக்கால் சைல்டு லைன் அமைப்பு சார்பில், குழந்தைகளின் உரிமை, பாதுகாப்பு குறித்து, காரைக்கால் பூவம் பகுதியில் திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்காலில் சைல்டு லைன் அமைப்பு மூலம் குழந்தைகளுக்கான பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை விளக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் பூவம் பகுதி மாதாகோயில் தெருவை சேர்ந்த குழந்தைகள், பெற்றோர்கள் பங்கேற்ற திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பூவம் பகுதி கிராம நிர்வாக அதிகாரி அருண் கலந்துகொண்டு, குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்துப் பேசினார். சைல்டு லைன் அமைப்பின் பணிகள், குழந்தை தொழிலாளர், குழந்தைகளுக்கான உரிமைகள், பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணம் போன்றவை குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள், தடுக்கும் முறைகள் குறித்தும் சைல்டு லைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விமலா தலைமையில், உறுப்பினர்கள் விளக்கி பேசினர். இதற்கான ஏற்பாட்டினை சைல்டு லைன் உறுப்பினர்கள் அகிலா, கீதா, புஷ்பநாதன் செய்திருந்தனர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...