காரைக்கால், ஏப்.30: புதுச்சேரி அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, பூம்புகாரில் உள்ள ம.சா. சுவாமிநாதன் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில், உலக வங்கி பிம்சூல் திட்டத்தின் மூலம் சிறு படகு மீனவர்களுக்கு டீசல் இன்ஜின் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கலுக்கான 3 நாள் பயிற்சி முகாம் காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் நடந்தது. இதில் மீனவர்களுக்கு 10 எச்பி திறன் கொண்ட இன்ஜின் பாகங்களை கழற்றி, மீண்டும் பொருத்துதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டர் நாகேந்திரன் தொடங்கி வைத்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பயிற்சியாளர் வீரமுத்து மீனவர்களுக்கு பயிற்சி அளித்தார். நேற்றுமுன்தினம் நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.