×

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அப்பர் சுவாமிகளுக்கு திருக்கட்டமுது விழா

பெரம்பலூர்,ஏப்.30 பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் திருச்சிற்றம்ப லம் அப்பர் சுவாமிகளுக்கு 49வது திருக்கட்டமுது விழா நடந்தது.
 பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அப்பர் சுவாமிகள் அவதார விழாவும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் திருக்கட்டமுது விழாவும் நடைபெற்றது. சித்திரை மாதம் வளர்பிறை சதய நட்சத்திரத்தில் அப்பர் என்கிற திருநாவுக்க ரசர் பிறந்தார். இதனையொட்டி பெரம்பலூர்  அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் 63நாயன்மார்களில் ஐவராகிய திரு ஞானசம்மந்தர். திருநாவுக்கரசர், சுந்தர்ராஜர், மாணிக்கவாசகர் மற்றும் சேக்கிழார் ஆகிய ஐவர் நாயன்மார்களுக்கு 49ம்ஆண்டு குருபூஜையை முன்னிட்டு சிறப்பு அபி ஷேகம் செய்து 12மணியளவில் மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த திரளான சிவபக்தர்கள் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,Upper Swamis ,Perambalur Brahmapureeswarar ,
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா