×

கந்தர்வகோட்டை அருகே சொத்து தகராறு தம்பி கொலை வழக்கில் கோர்ட்டில் அண்ணன் சரண்

கந்தர்வகோட்டை, ஏப்.30: கந்தர்வகோட்டை அருகே சொத்து தகராறில் தம்பியை கட்டையால் அடித்து கொலை செய்த அண்ணன் திருமயம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம்   கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையை சேர்ந்தவர்கள் கருப்பையா(53), மனோகரன்(45). இருவரும் அண்ணன் தம்பிகளாவார்கள். இவர்களுக்கு இவர் தந்தை வேம்பையன் வாங்கி கொடுத்த வீட்டை பங்கு போட்டு கொள்வதில் நீண்ட நாட்களாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் அண்ணன் தம்பியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் கருப்பையா, தம்பி மனோகரனை கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த மனோகரன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் கொலை வழக்காக மாற்றி  அண்ணன் மதி (எ) கருப்பையாவை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை திருமயம் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முகமதுஅலி முன்னிலையில் கருப்பையா சரண் அடைந்தார்.

Tags : Brother Saran ,court ,Gandharvatte ,
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...