×

தஞ்சையில் மே 8ம் தேதி விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை தேர்வு

தஞ்சை, ஏப்.30: தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிலுவதற்கான தேர்வு வரும் 8ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கேற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சை, அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது.

ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்களில் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு மே 8ம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை ஆகிய விளையாட்டுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் அதற்கான உரிய படிவங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 7ம் தேதி மாலை 5 மணிக்குள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். தஞ்சை, ஏப்.30: தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிலுவதற்கான தேர்வு வரும் 8ம் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கேற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சை, அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்களில் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு மே 8ம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை ஆகிய விளையாட்டுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் அதற்கான உரிய படிவங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 7ம் தேதி மாலை 5 மணிக்குள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்