கும்பகோணம், ஏப். 30: கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் திருசத்திமுற்றம் வடக்குவீதியில் உள்ள சக்திமா காளியம்மன் கோயில் உற்சவத்தையொட்டி காளி திருநடன புறப்பாடு நேற்று நடந்தது. இக்கோயிலில் கடந்த 16ம் தேதி மாலை பூச்சொரிதல், காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. கடந்த 23ம் தேதி 2வது காப்பு கட்டுதல் , அம்பாள் வீதியுலா நடந்தது. 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை அம்பாள் வீதியுலா நடந்தது. இந்நிலையில் நேற்று காளி திருநடன புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று பால்குட திருவிழா நடக்கிறது.