×

10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி ஒரத்தநாடு லண்டன் கிருஷ்ணமூர்த்தி மெட்ரிக் பள்ளிக்கு பெற்றோர் பாராட்டு

ஒரத்தநாடு, ஏப். 30: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் லண்டன் கிருஷ்ணமூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. லண்டன் நகரில் தமிழ் சங்கத்துக்கு பெருமை சேர்த்த லண்டன் கிருஷ்ணமூர்த்தியால் துவக்கப்பட்டு இன்று அப்பள்ளியில் பல்வேறு சிறப்பு பாடங்களை சிறப்பாசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு வழங்கி நவீன பாடத்திட்டத்தை மிக குறைந்த கட்டணத்தில் அளித்து வெற்றிப்பாதையில் தாளாளர் கலியராஜ் மற்றும் முதல்வர் சுதாகர் ஆகியோர் தலைமையிலான ஆசிரியர்கள் குழு அழைத்து செல்கிறது.

2018-2019ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவர் அப்துல்கபூர் 491 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவி ஆசினி 490 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், மாணவி தாரணி 489 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தையும் பெற்று ஒரத்தநாடு கல்வி மாவட்டத்திலேயே முதலாம் இடத்தை இப்பள்ளி பெற சாதனையாளர்களாக வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 475 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 36 பேரும் , 400 மதிப்பெண்களுக்கு மேல் 79 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags : Parents ,London Krishnamurthy Matriculation School ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்