×

ஏர்போர்ட் அருகே வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை

ஏர்போர்ட், ஏப்.30: ஏர்போர்ட் அருகே வாலிபர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். திருச்சி ஏர்போர்ட் ஆர்.வி.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இவரது மகன் ராஜராஜன் (24). படித்து விட்டு வேலை தேடி வந்த அவர் கடந்த சில நாட்களாக கார் வாங்கித் தருமாறு தனது தந்தையிடம் கேட்டு வந்தார். தந்தை மறுத்ததாக தெரிகிறது. இதனால் வேதனையில் இருந்து வந்த ராஜராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று ராஜராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide bomber ,suicide ,airport ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...