×

திருச்சி தலைமை அஞ்சலகத்தில் சிறு அஞ்சல்தலை கண்காட்சி நாளை துவக்கம்

திருச்சி, ஏப்.30: விடுமுறை காலத்தை முன்னிட்டு திருச்சி தலைமை அஞ்சலகத்தில் மே மாதத்தில் கோடை பெக்ஸ் 2019 என்ற சிறு அஞ்சல் தலை கண்காட்சியும், புதன் கிழமைகளில் கோடை முகாமும் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தை முன்னிட்டு திருச்சி தலைமை அஞ்சலகத்தில் மே மாதத்தில் கோடை பெக்ஸ் 2019 என்ற சிறு அஞ்சல்தலை கண்காட்சி அஞ்சல்தலை சேகரிப்பு நிலையத்தில் நாளை (1ம் தேதி) தொடங்கப்பட உள்ளது.  பல்வேறு தலைப்புகளில் திருச்சி, தஞ்சை மற்றும் ரங்கம் கோட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களிடமிருந்த பெறப்பட்ட அஞ்சல் தலைகள் இந்த காண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.  மேலும் மே மாதம் பிரதி புதன்கிழமைகளில் அஞ்சல் தலை சேகரிப்பு சம்பந்தமான கோடை முகாம் நடத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த காண்காட்சியை கண்டு ரசித்து மாணவர்களை ஊக்கப்படுத்தலாம் என திருச்சி கோட்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Trichy Chief Annapalakam ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு