கெங்கவல்லி, ஏப்.30: வீரகனூரில் கேட்பாரற்று கிடக்கும் விநாயகர் சிலையை மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கெங்கவல்லி தாலுகா வீரகனூர் சுவேத நதிக்கரையில், கடந்த 3 தினங்களாக விநாயகர் சிலை ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது. இந்த சிலை அசுத்தம் நிறைந்து காணப்படுவதால், ஆன்மீக அன்பர்கள் நடுவே அதிருப்தி நிலவுகிறது. எனவே, வீரகனூர் வருவாய் ஆய்வாளர் சம்பந்தப்பட்ட விநாயகர் சிலையை மீட்டு, ஏதேனும் கோயிலில் ஒப்படைக்க வேண்டும் என, வீரகனூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.