×

ஓட்டல் தொழிலாளி மாயம்

சேலம், ஏப்.30: சேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் ஜெயபிரபு(32). இவர் சேலம் டவுன் போலீஸ் ஸ்டேசன் எதிர்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால், அவரது தாய் தேவகி, செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் சம்பளம் வாங்கினால், இதுபோல் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்று விடுவாராம். தற்போது அவரது செல்போன் சுவிட்ச்ஆப் ஆகியுள்ளதால் அவரது பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்