×

எஸ்எஸ்எல்சி தேர்வில் காந்தி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

திருச்செங்கோடு, ஏப்.30: திருச்செங்கோடு அருகேயுள்ள கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது. மாணவி சௌதர்ஷினி 485 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் தமிழில்-98, ஆங்கிலத்தில்-96, கணிதத்தில்-97, அறிவியலில்-98, சமூக அறிவியலில்-96 பெற்றுள்ளார். மாணவர் மௌலி   வினாயகா 479 பெற்று இரண்டாமிடமும், மாணவி வினோதினி 478 பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.  இப்பள்ளியில் 450க்கு மேல் 29 பேரும், 400க்கு மேல் 52 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் 98ம், சமூக அறிவியலில் 99ம் மதிப்பெண்களை இப்பள்ளி பெற்றுள்ளது. சாதனை படைத்த மாணவ, மாணவிகளை தாளாளர் சண்முகசுந்தரம், இயக்குனர்கள் சிவா, வித்யா சிவா ஆகியோர் பாராட்டினர்.

Tags : Gandhi Matriculation School ,
× RELATED திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக்...