×

எஸ்எஸ்எல்சியில் நூறு சதவீதம் தேர்ச்சி தொடர்ந்து 14ம் ஆண்டாக எஸ்பிகே பள்ளி சாதனை

திருச்செங்கோடு, ஏப்.30:  பத்தாம் வகுப்பு பொது தேர்வில், திருச்செங்கோடு எஸ்.பி.கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 14ம் ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி ஹம்சவர்த்தினி 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் தமிழ், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 99 மதிப்பெண்  பெற்றுள்ளார். மாணவி சுஷ்மிதா 487 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார். இவர் அறிவியலில் 100 மதிப்பெண்கள்  பெற்றுள்ளார்.

மாணவி நித்யஸ்ரீ 480 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்து, சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எஸ்.பி.கே மெட்ரிக் பள்ளியில் தேர்வெழுதிய 15 பேர் 475க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 25 பேர் 450க்கு மேலும், 38 பேர் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் செங்கோடன் மற்றும் தலைவர் பிரபுக்குமார் ஆகியோர் பாராட்டினர். முதல்வர் தனபால், துணை முதல்வர் சம்பூர்ணம்,  நிர்வாக அலுவலர் சிந்து ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Espighy ,
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு