×

பந்தலூர் அருகே தரமற்ற வீடுகளால் ஆதிவாசி மக்கள் பாதிப்பு

பந்தலூர், ஏப். 28:  பந்தலூர் அருகே எருமாடு வெட்டுவாடி பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்பு தரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.  பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி எருமாடு வெட்டுவாடி பகுதியில் வசித்துவரும் ஆதிவாசி மக்களுக்கு சேரங்கோடு ஊராட்சி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.  இந்நிலையில், கட்டப்பட்ட வீடுகள் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு வீடுகளின் கூரையில் இருந்து நீர் கசிவு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் கனமழை பெய்தால் வீடுகளில் குடியிருக்க முடியாத நிலை ஏற்படும். எனவே மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் குடியிருப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று உரிய ஆய்வு செய்து, தரமான முறையில் வீடுகளை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : houses ,Pandalur ,
× RELATED கோடை வெயிலின் தாக்கம்: கருகும் தேயிலை செடிகள்