×

திருத்துறைப்பூண்டி அருகே ஏடிஎம் அறையில் ஏசி திருட்டு

திருத்துறைப்பூண்டி, ஏப். 28: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆலத்தம்பாடி கரும்பியூர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் கடந்த 24ம் தேதி வங்கி நிர்வாகத்தின் மூலம் பணம் வைக்க சென்ற போது ஏடிஎம் அரையிலிருந்த ஏசிக்களை காணவில்லை என்று தெரியவந்தது. ஏடிஎம் அறையில் இருந்த ஏசி எப்போது திருட்டு போனது என்று தெரியவில்லை. இது குறித்து திருத்துறைப்பூண்டி பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் விமல் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆலிவலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Tags : AC ,theft ,ATM room ,Thiruthuraipondi ,
× RELATED குமரி நாடாளுமன்ற தொகுதி தேர்வு...