×

வாகனச்சோதனை செய்த இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றதாக 2பேர் கைது

மதுரை, ஏப்.28:  மதுரை நகர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன். இவர் நெல்பேட்டை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, டூவீலரில் 2 பேர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
அவர்கள் இருவரும், இன்ஸ்பெக்டர் மனோகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தாக்கவும் முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து கோ.புதூர் போலீசில் மனோகரன் புகார்செய்தார். இதன்பேரில், புதூர் விஸ்வநாதன் நகரைச் சேர்ந்த கண்ணன் (39), கடச்சனேந்தலைச் சேர்ந்த ஜெயபால்(32) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : inspector ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு