×

வாசுதேவநல்லூரில் மீண்டும் துணிகரம் வீடுபுகுந்து மூதாட்டியிடம் மூன்றரை பவுன் பறிப்பு

சிவகிரி, ஏப். 28:  வாசுதேவநல்லூரில் வீடுபுகுந்த கொள்ளையன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 3.5 பவுன்  நகையை பறித்துச் சென்றான். வாசுதேவநல்லூர் சேனையர் தெற்குத் தெருவைச் சேர்ந்த ராமசாமி மனைவி ஆவுடையம்மாள் (60). கணவர் மறைவுக்குப் பிறகு தனது மகன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது மருமகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.    நள்ளிரவில் வீடுபுகுந்த மர்ம நபர் ஆவுடையம்மாள் அணிந்திருந்த 3.5 பவுன் தங்கநகையை பறித்துச் சென்றார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வாசுதேவநல்லூர் போலீசார், மர்ம நபரைத் தேடி வருகின்றனர். இதே போல் கடந்த 15ம் தேதி இரவு அங்குள்ள புதுமந்தை 3ம் தெருவில் வசித்து வரும் இந்திரா(50) அவரது மகள் வாசுதேவி (23) ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீடு புகுந்த மர்ம நபர்   5 பவுன் தங்கநகைகளை பறித்துச் சென்றார். அதன்சுவடு மறைவதற்குள் தற்போது 2வது முறையாக நடந்துள்ள இச்சம்பவத்தால் அப்பகுதி பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags : Vasudevanallur ,
× RELATED வாசுதேவநல்லூரில் மமக நிர்வாகிகள் தேர்வு