×

மன்னார்குடி கிளைச்சிறையில் புதுகை மண்டல எஸ்பி திடீர் ஆய்வு

மன்னார்குடி, ஏப். 28: மன்னார்குடி கிளைச் சிறையில் புதுகை மண்டல சிறைத்துறை எஸ்பி திடீர் ஆய்வு மேற்கொண்டு அலுவலக ரெக்கார்டுகளை பார்வையிட்டு கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள கிளைச்சிறையில் தமிழக சிறைத் துறை புதுகை மண்டல எஸ்பி ருக்மணி பிரியதர்சினி ஆய்வு பணிகளை மேற் கொண்டார். முன்னதாக மன்னார்குடி கிளைச்சிறைக்கு வந்த புதுகை மண்டல எஸ்பி ருக்மணி பிரியதர்சினி உதவி சிறை அலுவலர் குணசேகரன் தலைமையில் நடந்த சிறைத்துறை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு வீரர்களின் மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் மன்னார்குடி கிளைச்சிறை அலுவலகத்தின் ரெக்கார்டுகள், துப்பாக்கிகள், சிறையில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், கைதிகள் குறித்த ஆவணங்கள், கைதிகள் தங்க வைக்கப்படும் அறைகள், சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், மருத்துவ வசதிகள், குடிநீர்  உள்ளிட்ட அடைப்படை வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்த மண்டல எஸ்பி சிறை கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Tags : inspection ,Zonal SSP ,branch ,Mannargudi ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...