×

திமுக வேட்பாளரை ஆதரித்து ஓட்டப்பிடாரம் தொகுதியில் மே 1,2ல் ஸ்டாலின் பிரசாரம் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை

தூத்துக்குடி, ஏப். 28: ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் கே.என்.நேரு எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். அதன்படி மே 1ம்தேதி மாலை 5 மணிக்கு தூத்துக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஹவுசிங் போர்டு குடியிருப்போர் நலச்சங்கம் சந்திப்பில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து, அன்னை இந்திரா நகர் பகுதியிலும், 6 மணிக்கு மாப்பிள்ளையூரணியிலும், இரவு 7 மணிக்கு தருவைக்குளத்திலும், 7.30 மணிக்கு புதியம்புத்தூரிலும், 8 மணிக்கு ஓட்டப்பிடாரத்திலும் பேசுகிறார். மே 2ம்தேதி காலை 8.30 மணிக்கு ஸ்பிக்நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சந்திப்பில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பின்னர், மாலை 5 மணிக்கு கோரம்பள்ளத்தில் தொடங்கி, புதுக்கோட்டை, கூட்டாம்புளி, தங்கம்மாள் புரம், கட்டாலங்குளம் வழியாக சென்று இரவு 7.30 மணிக்கு முடிவைத்தானேந்தலில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இதில், அனைத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : campaign ,Stan ,KN Nehru ,Anita Radhakrishnan ,candidate ,constituency ,DMK ,Ottapidaram ,
× RELATED கர்நாடகாவில் ஆபாச வீடியோ விவகாரம்...