×

திருச்செந்தூரில் மீனவரை தாக்கியவர் கைது: 4 பேருக்கு வலை

திருச்செந்தூர், ஏப்.28: திருச்செந்தூர் அமலிநகர் செபஸ்தியார் கோயில் தெரு ஜெயபிரகாஷ் மகன் நேசாக்(23) மீனவர். அதே ஊரைச்சேர்ந்த ஆனந்தராஜ் மகன்கள் செபஸ்டின், உபால்டன், கனிஸ்டன், சாக்சன், செபஸ்டன் மகன் ஆகாஷ்(20). இவர்களும் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். நேசாக் வழக்கமாக படகை கரையில் நிறுத்தும் இடத்தில் 5 பேரும் அவர்கள் படகுகளை நிறுத்தியுள்ளனர். இதை நேசாக் தட்டி கேட்டதில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே நேசாக்கை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த நேசாக் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தாலுகா எஸ்ஐ கனகராஜ் விசாரணை நடத்தி, ஆகாசை கைது செய்தார். சகோதரர்கள் உள்பட 4 பேரை தேடி வருகிறார்.

Tags : Fisherman ,Tiruchendur ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...