×

இளம்பெண்ணை தாக்கி நகை பறிப்பு

குன்றத்தூர், ஏப்.28: குன்றத்தூர், மேத்தா நகர் 13வது தெருவை சேர்ந்தவர் மணிராஜ் (32). இவரது மனைவி கார்த்திகா (27).நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தண்ணீர் இல்லாததால், வெளியே இருந்த மின் மோட்டாரின் சுவிட்ச் போடுவதற்காக கார்த்திகா சென்றார்.அப்போது பைக்கில் வந்த 2 பேர், கார்த்திகாவிடம் ஒரு பேப்பரை காட்டி, முகவரி கேட்டனர். அவர், அந்த பேப்பரை பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென அவரை சரமாரியாக தாக்கி, அவர் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர்.புகாரின்படி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : lady ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...